இந்திய தூதரகத்தில் என் பாஸ்போர்ட் தூங்குகிறது - பீட்டர்சன்!

செவ்வாய், 11 மார்ச் 2014 (12:01 IST)
இந்தியாவுக்குச் செல்வது கடினமானது என்று இங்கிலாந்து அணியிலிருந்து ஒழிக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
FILE

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில்,

'இந்தியாவுக்கு அவசரமாக செல்வது என்பது கடினமான விஷயமாகும். தனிப்பட்ட காரணத்துக்கான இந்தியா செல்ல விசா கேட்டு இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்து இருந்தேன்.

விசா பெறும் பணிக்கு 24 மணி நேரமே போதுமானதாகும். ஆனால் இந்திய தூதரகத்தில் எனது பாஸ்போர்ட் கடந்த 10 நாட்களுக்கு மேல் தூங்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்