பல சிறப்பு அம்சங்களை கொண்ட சித்ரா பெளர்ணமி !!

சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி. இந்த தினத்தில் எமலோகத்தில் நம் புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு தான தர்மங்கள் செய்வதால், அவரின் அருள் நாம் பெறலாம்.  நீண்ட ஆயுள் பெறலாம். சித்ரா பெளர்ணமி பல  சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
 
சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று அம்பாளின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மலர் மாலை அணிவித்து, வஸ்திரம், ஆபரணங்களை அணிவித்து வழிபடுவது நல்லது. அம்பாளுக்கு மஞ்சள் கலந்த சாதம் படைத்து, பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப்  படைக்க வேண்டும்.
 
சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்