பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

திங்கள், 23 மே 2022 (09:36 IST)
பைரவரை வணங்கினால் கோடி புண்ணியம். அனைத்து சிவன் ஆலயங்களிலும் 'ஈசான்ய மூலை' எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.

Lord Bhairava

ஸ்ரீ பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரு ம் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லருள் கிட்டும்.

இலுப்பை எண்ணெய் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிடம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் உண்டாகும்.

இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வழிபட்டால் மிகுந்த பலன்களை வாரி வழங்குவார் என்பது ஐதீகம். மேலும் பைரவருக்கு மிளகு கலந் தசாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும். எதிர்ப்புகளை விலக்கும்.

இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும், நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்