சரி ஜெர்மன் விஷயத்திற்கு வருவோம். பெர்லின் நகரில் உள்ள ஒரு விபசார விடுதி தங்களது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், புதிய தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் தள்ளுபடி கொடுத்து உள்ளது.
இப்படி ஒரு திட்டத்தை இதுவரை வேறு ஏதாவது நிர்வாகம் சிந்தித்துள்ளதா? செய்யும் தொழில் வேண்டுமானால் விபச்சாரமாக இருக்கலாம், சிந்தனையில் இவர்கள் உயர்ந்துவிட்டார்கள் அல்லவா?
இது குறித்து விடுதியின் உரிமையாளர் கூறுகையில், பொருளாதார நெருக்கடி எங்கள் தொழிலையும் பாதித்து உள்ளது. அதனால் இந்த தள்ளுபடியை அறிவித்து உள்ளோம். இந்த தள்ளுபடி காரணமாக கூடுதலாக வாடிக்கையாளர்களை பெற முடியும் என்று நம்புகிறோம். சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களால் சுற்றுச்சூழலுக்கும், எங்கள் தொழிலுக்கும் நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுதியில் 45 நிமிடத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சைக்கிளில் அல்லது பேருந்தில் வந்தால் 250 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்படும். இந்த தள்ளுபடிக்குப் பிறகு எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று கூறுகிறார் விடுதியின் உரிமையாளர்.