விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவுதான் ஏற்பட்டாலும், முன்னோர்கள் சொன்ன சில விஷயங்களை நாம் இன்னும் அப்படியே நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம். அதைப்பற்றி ஆராய்வதே கிடையாது. மேலைநாட்டினர் 13-ந் தேதியும், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால், தனது வாழ்க்கையில் பயங்கர சம்பவங்கள் நிகழப்போவதாக அச்சப்படுகின்றனர். அவர்கள் நினைத்தது போல் பல சம்பவங்களும் நடந்துள்ளது.
இதேநிலை, தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வரும் 13-ந் தேதியை அச்சத்துடனே பலர் எதிர்கொள்கின்றனர். இதை மையமாக வைத்து, `பிரைடே தி தேட்டீன்த்' என்ற ஆங்கில திகில் படமே வந்துள்ளது. நம்மூரில் 13ஆம் நம்பர் வீடு என்று ஒரு பேய் படம் எடுக்கப்பட்டதல்லவா அதுபோலத்தான்.