குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும்?

* தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை: மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.


 

 
* பகைமைச் சூழலில் வளரும் குழந்தை: பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.
* பயத்தில் வளரும் குழந்தை: கவலைப்பட கற்றுக் கொள்கிறது.
* பச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை: தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.
* பொறாமைச் சூழலில் வளரும் குழந்தை: குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.
* பாராட்டப்பட்டு வளரும் குழந்தை: மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.
* புகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை: மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.
* சகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை: பொறுமையை கற்றுக் கொள்கிறது.
* பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை: பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.
* உற்சாகப்படுத்தப்படும் சூழலில் வளர்ந்த குழந்தை: தானாகக் எதையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறது.
* முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை: குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.
* பாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை: நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.
* நேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை: உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.
* பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை: தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்