வெற்றி பெறும் வழி - விவேகானந்தர்

சனி, 25 ஏப்ரல் 2009 (12:03 IST)
சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அருகே சில இளைஞர்கள் ஆற்று நீரில் மிதந்து சென்ற முட்டை ஒடுகளை சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களில் ஒருவராலும் முட்டை ஓடுகளை குறிபார்த்து சுட முடியவில்லை.

அவர்களை புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் விவேகானந்தர். அவரின் சிரிப்பை கண்ட இளைஞர்கள் அவரிடம், கேலியாக பார்க்கிறீர்களே உங்களால் சுட முடியுமா? என்று சவால்விட்டனர்.

முயற்சி செய்கிறேன் என்றார் விவேகானந்தர் அடக்கமாக.. நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமான காரியல் இல்லை என்றனர் இளைஞர்கள்.

விவேகானந்தர் அவர்களிடமிருந்து துப்பாக்கியை வாங்கினார். ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு ஒவ்வொன்றாக 12 முட்டை ஓடுகளை சுட்டார். ஒரு முறை கூட அவரது குறி தவறவில்லை. இளைஞர்களுக்கு ஒரே வியப்பு. உங்களால் இது எப்படி முடிந்தது என்று கேட்டனர்.

விவேகானந்தர் பதிலளித்தார், நான் இப்போதுதான் முதல் தடவையாக துப்பாக்கியை கையில் எடுத்துள்ளேன். எதைச் செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும். அப்படி செய்தால் எதையும் சாதிக்கலாம். ஒன்றை செய்யும்போது இன்னொன்றை நினைக்கக் கூடாது என்றார்.

நாமும் வெற்றி பெற மனதை ஒருமுகப்படுத்துவோம்

வெப்துனியாவைப் படிக்கவும்