இன்று மகாகவி பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, காலை 9 மணிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
தனது எழுத்துக்களின் மூலம் பாமர மக்களுக்கும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் கவிதைகளை இந்த நாளில் நினைவு கூர்வோம்.
பாரதியாரின் சில கவிதைகள்...
தமிழ் மொழியைப் பற்றிய கவிதையில்... யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லுவதிலோர் மகிமை யில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போலிளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி யாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)
கலை மகளைப் போற்றுகிறார் மகாகவி.. வெள்ளைத் தாமரைப் பூ வி லிருப்பாள் வீணை செய்யு மொலியி லிருப்பாள்..... வீடுதோறுங் கலையின் விளக்கம் வீதிதோறு மிரண்டொரு பள்ளி நாடு முற்றிலு முள்ளன வூ ர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாததொ ருரைத் தீயினுக் கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கு மமுதெமெ னன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் (வெள்ளைத்) நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர் ஆண்மையாள ருழைப்பினை நல்கீர் மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம் வாணி பூசைக் குரியன பேசீர் எதுவு நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் நாட்டுதும் வாரீர்.