ஊனத்தை ஊனப்படுத்தியவர் எடிசன்

புதன், 27 மே 2009 (11:53 IST)
டங்ஸ்டன் இழை கொண்ட மின் விளக்குகள் முதல் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் ஏராளம் ஏராளம்.

அவற்றின் முன்னேறிய தொழில்நுட்பங்கள்தான் நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலானவைகள் என்றால் அது மிகையில்லை.

அப்படிப்பட்ட அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு குறை இருந்தது.

அவருக்கு லேசாக காது கேட்காது. ஆனால் அந்த ஊனத்தையே ஊனமாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

ஒரு முறை அவரிடம், உங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது.

அதாவது, எனக்கு காது சரியாக கேட்காது. எனவே அடுத்தவர் திட்டினாலும், புகழ்ந்தாலும் எனக்கு கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலையை பார்க்க முடிந்தது. அதனால் தான் நான் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது என்று கூறினார்.

ஊனத்தையே ஊனமாக்கும் வித்தை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது. அதனை எல்லோரும் கற்றறிவோம்

வெப்துனியாவைப் படிக்கவும்