பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 31ஆவது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு எதிர்பார்த்த துப்பாக்கி சுடுதல், வில்வித்தை பல விளையாட்டுகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு பறிபோனது. இந்தியா இதுவரை பதக்கப்பட்டியலில் இடம்பெறவில்லை
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் குழுவின் நல்லெண்ண தூதராக உள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், “பூமியில் நடைபெறும் மிகப்பெரிய, மிகவும் போட்டித்தன்மையுள்ள விளையாட்டு தொடர் என்றால் அது ஒலிம்பிக் போட்டிதான். ஒரு தேசத்தின் பிரதிநிதியாக பங்கேற்பது என்பது விளையாட்டு காரியமல்ல.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடையும்போது வருத்தமளிக்கிறது. பாதி போட்டிகள் இன்னும் முடிவடையவில்லை. நீங்கள் நினைத்த முடிவுகள் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.