ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டையில் இந்தியா முதல் சுற்றில் வெற்றி

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (15:22 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் மனோஜ் குமார் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று, இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ஆண்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் மனோஜ் குமார் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
 
ஏற்கனே ஜிம்னாஸ்டிக்கில் பெண்களுக்கான வால்ட் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தீபா கர்மகர் இறுதி சுற்றுக்கு முன்னேறி புதிய வரலாற்றை படைத்ததுடன், இந்தியாவின் பதக்கம் வெல்லும் கனவையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
அதன் வரிசையில் தற்போது குத்துச்சண்டை பிரிவில் மனோஜ் குமாரும் வெற்றிப் பெற்று இந்தியாவுக்கு பதக்கம் வெல்லுவார் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்