டிஸ்மிஸ் செய்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்து கொண்ட ஜொமைட்டா!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:15 IST)
பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமைட்டா நிறுவன ஊழியர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் வாடிக்கையாளரிடம் பேசியதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் ஜொமைட்டா ஊழியரிடம் சமீபத்தில் பேசியபோது ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என்றும் இந்தி தேசிய மொழி என்றும் ஜொமைட்டா ஊழியர் பேசியதாக தெரிகிறது
 
இதனால் தமிழகமே கொந்தளித்த நிலையில் ஜொமைட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது என்பதும், சம்பந்தப்பட்ட அந்த ஊழியரை டிஸ்மிஸ் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புகார் அளித்த விகாஸ் ஜொமைட்டா நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியரை நிறுவனம் மீண்டும் வேலையில் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்