இன்ஸ்டாகிராமில் நட்பு.. 19 வயது வாலிபருடன் லாட்ஜுக்கு சென்றமாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (12:24 IST)
இன்ஸ்டாகிராமில் கிடைத்த நட்பின் அடிப்படையில் 19 வயது வாலிபர் அழைத்ததால் லாட்ஜுக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கொல்லாங்காடு என்ற பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் 19 வயது வாலிபர் நாகேஷ் உடன் நட்புடன் பழகினார். இதனையடுத்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு  பேசி வந்தனர் 
 
இந்த நிலையில்  வாலிபர் நாகேஷ் பத்தாம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கே வந்து அவரை லாட்ஜிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 
இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் செய்த நிலையில் தலைமறைவான 19 வயது நாகேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்