மருத்துவரை பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய வழக்கில், நீதிபதி கேட்ட கேள்விக்கு போலீசார் பதிலளிக்காமல் மௌனமாக இருந்ததை அடுத்து, இளைஞர் விக்னேஷுக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மருத்துவர் பாலாஜியை தாக்கியதாக இளைஞர் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ், "நோயாளிக்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா?" என நீதிபதி ஜெகதீஷ் சங்கரா கேள்வி எழுப்பினார்.
ஆனால், இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் போலீசார் மௌனமாக இருந்தனர். இதையடுத்து, விக்னேஷுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.