இரு குழந்தைகளை தீக்குக் இரையாக்கிய தாய்… கடைசியில் தானும்! – குடும்ப பிரச்சனையால் பலியான 3 உயிர்கள்!

திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:48 IST)
மதுரையில் கணவனுடனான தகராறு காரணமாக பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளையும் தீவைத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேவுள்ள மேலவாசலைச் சேர்ந்த தம்பதிகள் பாண்டி மற்றும் தமிழ்ச் செல்வி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. தம்பதிகளுக்கு வரணிஸ்ரீ (4), வர்ணிகாஸ்ரீ (2)  என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட சண்டைக் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்ச் செல்வி தன் இருமகள்களையும் தீவைத்து கொன்றுவிட்டு, தானும் தீவைத்துக் கொண்டார்.

இதில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாக, தமிழ்ச்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்