திருப்பூரில் ஒரு பெண்ணிடம் தொழிலதிபர் எழுபது லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் பல நாட்களாக அந்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை பணத்தை கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், தர மறுத்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் தொழிலதிபர் வீட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டார்.