சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் கோடை மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று பாலச்சந்திரன் கூறினார். கடல்காற்று தாமதமாக வீசுவதாலும், மேற்கிலிருந்து தரைக்காற்று வலுவாக வீசுவதாலும் வெப்பம் அதிகரிக்கும்.