நவம்பர் 24 ஆம் தேதி அன்று, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பாஜக இளைஞரணி செயலாளர் ரமேஷ், காரில் சென்ற போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிபடுகொலை செய்தது.
இதனையடுத்து அவரது வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரமேஷ் படுகொலை கடும் கண்டனத்திற்கு உரியது. அவரை 27 இடத்தில் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கூலி படை கலாச்சாரம் நிலவி வருகிறது. இதை போலீசார் உடனே தடுக்க வேண்டும் என்றார்.