தமிழகக் கோயில்களில் படிப்படியாக விஐபி தரிசன முறை ரத்து- அமைச்சர் சேகர் பாபு

செவ்வாய், 22 நவம்பர் 2022 (15:21 IST)
தமிழகத்தில் கடந்தாண்டு  நடந்த சட்டசபைத்தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ‘’திராவிட மாடல் ‘’ பெயரில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று, கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக  ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

ALSO READ: அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகக் கோயில்களில் விஐபி தரிசனத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற  நிலை மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்