மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் போன்று எண்ணெய் கழிவுகள் அகற்றப்படுகிறது. கப்பல் இடித்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. கழிவுகளை அகற்ற தேவையான உபகரணங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. வாளீயை வைத்து அள்ளி சுத்தப்படுத்த இது என்ன கிணறா? இது போன்று செய்தால் என்றைக்கு இந்த பணி முடியும்? போராடினால்தான் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றால் இன்னொரு போராட்டத்துக்கும் தயார் என்று பேசினார்.