இரு மடங்காக உயர்ந்தது காய்கறிகள் விலை!!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:22 IST)
சென்னையில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விவரம் பின்வருமாறு... 
தக்காளி ஒரு கிலோ - ரூ.120
கத்தரிக்காய் ஒரு கிலோ - ரூ.100
வெண்டைக்காய் ஒரு கிலோ - ரூ.100
பீன்ஸ் ஒரு கிலோ - ரூ.100
அவரைக்காய் ஒரு கிலோ - ரூ.100
கேரட் ஒரு கிலோ - ரூ.90
பீட்ரூட் ஒரு கிலோ - ரூ.70 
முருங்கைக்காய்ஒரு கிலோ - ரூ.270

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்