நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் வீரப்பன் மனைவி

திங்கள், 11 செப்டம்பர் 2017 (01:15 IST)
சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த நிலையில் திடீரென தற்போது நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.



 
 
கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
 
மேலும் வரும் 18ம் தேதி வீரப்பனின் 13வது நினைவு தினம் என்றும், அன்றைய தினம் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்