இந்நிலையில் நாச்சியேந்தல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவன் மட்டும் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். வேறு மாணவர்கள் இல்லாத நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இருவர் மட்டும் பணியில் உள்ளனர்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
இந்த பகுதி மக்கள் பிழைப்பு தேடி வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் ஆங்கில வழி கல்வி கற்க தனியார் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் தான் இந்த திருவாடானை பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன, என்றனர்.