மதுரை மேலக்கோட்டை ஹவுசிங்போர்ட் பகுதியைச் சேர்ந்த சமையல் வேலை செய்துவரும் முனியப்பன் மகன் சங்கரபாண்டி (16). அதேபோல் ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த பெட்டிக்கடை நடத்திவரும் பாண்டியம்மாள் மகன் சஞ்சய் கண்ணன் (16) இருவரும் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை இருவரும் டியூசன் சென்ற திரும்பவில்லை. பெற்றோர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில், இன்று காலை திருமங்கலம் - விருதுநகர் சாலையில் உள்ள தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரது உடல்களும் கிடந்தன.