நாளை 4 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:27 IST)
கனமழை காரணமாக ஏற்கனவே மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் பள்ளிகள் கல்லூரிகள் கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருவாரூர் புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்