இரட்டை இலை சின்னத்தை பெற 60 கோடி ரூபாய் பேரம் பேசி 1.30 கோடி ரூபாய் முன் பணம் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்தரிடம் பேசவில்லை. யாரிடமும் பணம் கொடுக்கவிலலை. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என மறுத்துள்ளார். இந்நிலையில் டெல்லி காவல் துறை இன்று சென்னை வருவதாக தகவல்கள் வருகின்றன.