அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார் அதிமுகவின் தற்காலிக பொது செயலாளர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா ஜெயிலுக்கு செல்ல இருப்பதால் கட்சியை கட்டுப்பாட்டில் வைக்க துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு கட்சிக்கு துரோகம் இழைத்ததாக சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ், நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் ஜெயலலிதா அதிமுக கட்சியில் இருந்து நீக்கினார்.