ஆட்சியை கவிழ்ப்போம்; தேர்தலில் வெற்றி பெறுவோம்; தினகரன் நம்பிக்கை

சனி, 23 செப்டம்பர் 2017 (12:39 IST)
விரைவில் ஆட்சி கவிழும், பின்னர் வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


 

 
கர்நாடக மாநிலம் குடகு சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
ஊழல் ஆட்சி என்று விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்திருப்பது சதி மட்டுமல்ல, சசிகலாவுக்கு செய்த துரோகம். இங்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவிக்காக இல்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
 
விரைவில் ஆட்சி கவிழும். அதன் பின்னர் தேர்தல் வரும், அந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். பொதுக்குழு விரைவில் கூடும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்