திமுகவும், விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன. பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆவர் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன். திமுக தலைவர் கருணாநிதி, பாஜக தலைவர் தமிழிசை சௌந்த்ரராஜன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ப்பேன் என கூறினார். மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்தாலும் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று உறுதியாக கூறினார்.