அருவிகளில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்: குற்றாலத்தில் குளிக்க தடை

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (10:38 IST)
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 
 
பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக வருகிறது என்று கேள்விப்பட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்த நிலையில் தற்போது அவர்கள் குளிக்க முடியாததால் ஏமாற்றத்தில் உள்ளனர். 
 
இருப்பினும் தண்ணீர் குறைந்த உடன் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விலக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்