இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:47 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்