இன்று மாலையுடன் முடிவடைகிறது பிரச்சாரம்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள்!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:20 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறி உள்ளது.
 
இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதை அடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். 
 
இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் நாளை ஒருநாள் மக்கள் யாருக்கு போடலாம் என்று முடிவு செய்து நாளை மறுநாள் வாக்களிக்க வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மாலைக்கு மேல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்