தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, பெங்களூரூ மற்றும் முக்கிய ஊர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போது அனைத்து ரயில்களிலும் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழக அரசு பேருந்துகளுக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.