டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு

வெள்ளி, 30 அக்டோபர் 2015 (18:30 IST)
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  
 
நவம்பர் 8 ஆம் தேதி, வருவாய் கோட்டாச்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்  ஆகிய உயர்பதவிகளில் மொத்தம் 74 காலியிடங்களை நிரப்புவதற்காக, 33 மையங்களில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடக்க இருக்கிறது.
 
இந்த தேர்வுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதற்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் பதிவெண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலம். 
 
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என தேர்வானையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்