தமிழகத்தில் 401 போலீசாருக்கு கொரோனா

வியாழன், 13 ஜனவரி 2022 (11:05 IST)
தமிழகத்தில் 401 போலீசாருக்கு கொரோனா, சென்னையில் மட்டுமே 141 பேரருக்கு தொற்று என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா தொற்று 3வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால், 7 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கில் காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆம் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமே 400ஐ கடந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டுமே 141 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவலர்களின் வேலையும் அதிகரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்