சுகாதார பணியாளர்கள் பணிக்கு 7,296 பணியிடங்கள்! – மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு!

புதன், 1 டிசம்பர் 2021 (08:20 IST)
தமிழகம் முழுவதும் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையிலான சுகாதார பணியாளர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் புதிய கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் நிரப்ப மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு 4,848 இடங்களும், பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு 2,448 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்