கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுப்பு: தமிழக அரசு

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (20:05 IST)
கருணாநிதிக்கு காந்தி மண்டபம் அருகே அடக்க செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தயார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். 
 
இதற்கு தமிழக அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு தற்போது அறிக்கை ஒன்றி வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
 
மெரினாவில் கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய தயார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்