இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கொடுத்துள்ள அறநிலையத் துறை சம்பந்தமான அறிவிக்கையில் காவடி, தீச்சடி போன்ற நேர்த்திக்கடன் செலுத்துவோரிடம் இருந்து கோவிலில் நிர்வாகம் பெறப்பட்டு வந்த கட்டணத்தை முதல்-அமைச்சரின் ஆணைப்படி ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்கிறது.