ஆன்லைனில் கடன் பெற்ற பெண்ணுக்கு ஆபாச மிரட்டல்!

சனி, 3 டிசம்பர் 2022 (19:15 IST)
தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஆன்லைனில்  கடன் பெற்றிருந்த  நிலையில்  அவர் கடனை அடைத்தும் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்த ஆப் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு என்ற பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்(28 வயது). இவர் ஓரு ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றுள்ளானர்.

அவர் பெற்ற ரூ.20 பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். இருப்பினும் அவரது வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ALSO READ: ஆன்லைனின் ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவர் தற்கொலை!
 
அதாவது, மேலும் பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் ஆன்லைனின் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வீட்டில் கூறியுள்ளார். அவர்களும் ரூ.16 லட்சம் பணத்தை பல தவணைகளாகக் கொடுத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு அந்தக் கும்பல் மிரட்டவே சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார் அப்பெண்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்