கனமழை எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு!

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:09 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி ஒருநாள் மட்டும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்