கோவையில் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், ’’கடந்த 5 ஆண்டுகளில் அதிக டாஸ்மாக் கடைகளை திறந்தது தான் ஜெயலலிதாவின் சாதனை. மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கினால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என ஜெயலலிதா கூறி வருகிறார்.
கருணாநிதி குடும்பமும், திமுகவினரும், ஜெயலலிதா, சசிகலாவும் தான் மதுபான ஆலைகளை நடத்தி வருகிறார்கள். இந்த 2 பேரும் இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தமாட்டார்கள்.
தேமுதிகவை மக்கள் ஆதரித்து ஆட்சியமைந்தால், வீடு தோறும் ரேஷன் பொருட்கள் வந்துசேரும். நதிகள் இணைக்கப்படும். அரசுத்துறைகளில் ஊழல் இல்லாமலும், லஞ்சம் இல்லாமலும் செய்வோம்” என்று கூறியுள்ளார்.