அதிமுகவில் யாருமே தலைவர் இல்லை: இது வெல்லமண்டியின் விளக்கம்

செவ்வாய், 27 ஜூன் 2017 (23:37 IST)
எம்ஜிஆர் ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக தற்போது மூன்று அணியாக பிரிந்து இருக்கின்றது. இந்த மூவரில் யார் உண்மையான அதிமுக தலைவர் என்று இதுவரை தொண்டர்களால் கண்டறியப்படவில்லை



 


இந்த நிலையில் அ.தி.மு.க.வில் தற்போது தலைவர் என்று யாருமே இல்லை' என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதுவிளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

திருச்சியில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக கட்சிக்குத் தலைவர் என யாரும் இல்லை. முதலில் கட்சிக்குத் தலைவராக எம்.ஜி.ஆர் இருந்தார். அடுத்து அவர் வழியில் ஜெயலலிதா எங்களை வழிநடத்தினார். தற்போது தலைவர் யாரும் இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாதான் எங்களை வழிநடத்துகிறது' என்று புதுவிளக்கம் கூறி பத்திரிகையாளர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்