அப்துல் கலாம் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள ராமேஸ்வரத்திற்கு காலை சிறப்பு ரயில் இயக்கம்

வியாழன், 30 ஜூலை 2015 (03:12 IST)
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இறுதி சடங்குகளில் பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
 

 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு பொது மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த தென்னக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இன்று காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
 
இதே போன்று, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்