குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்!

புதன், 2 பிப்ரவரி 2022 (16:04 IST)
கணவர் சோடா வாங்கப் பணம் தாராததால் 2 குழந்தைகளைக் கொலை செய்துள்ளார் தாய். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி சகாயசெல்லி. இவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளனர்.  கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில்,நேற்று மாலை சகாயசெல்விக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே கணவர் ரமேஷிடம் சோடா குடித்தால் சரியாகிவிடும் என பணம் கேட்டுள்ளார்.  ஆனால், அவருக்கு ரமேஷ் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த சகாயவல்லி  2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள 60 அடிகிணற்றில் வீசிவிட்டு தானும் அதில் குத்தினார்.இதைப் பார்த்த அருகில் உள்ளோர் 3 பேரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், சகாயசெல்வியை காப்பாற்றினர்.2 குழந்தைகளும் பலியாகினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்