அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

திங்கள், 17 ஜூலை 2023 (08:52 IST)
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



கடந்த மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ஆளும் கட்சி அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்