கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர் ... ஓட்டுநரை விரட்டிப் பிடித்த போலீஸார்

திங்கள், 25 மே 2020 (15:58 IST)
சென்னை அயப்பாக்கத்தில்  வசித்து வரும் ரஞ்சித் தனது இருசக்கர வாகனத்டி சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே  வந்த ஒரு கார் மின்னல்  வேகத்தில் ரஞ்சித் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

அடிப்பட்ட ரஞ்சித் அதே காரின் மீது விழுந்ததாகத் தெரிகிறது.  ஆனால் காரி மேல் ஒருவர் விழுகிறார் என்பது கூட தெரியாமல் தப்பி ஓட முயன்றுள்ளார் காரின் ஒட்டுநர்.  அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் ஒரு கிலோ மீ., அவரைத் துரத்திச் சென்று காயம் அடைந்த ரஞ்சித் குமாரை மீட்டுள்ளனர்.

ஒரு சினிமாவில் நடப்பது போன்ற பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்