பேருந்தில் இருந்து பயணியை எட்டி உதைத்த நடத்துநர்! பரவலாகும் வீடியோ

வியாழன், 8 செப்டம்பர் 2022 (18:31 IST)
சமீப காலமாக அதிக சர்ச்சைகளில் சிக்கி வரும் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

சமீபத்தில், அங்குள்ள பள்ளிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று உத்தரவுபிறப்பிக்கப்படது. இதை உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசுப் பேருந்தில் படிக்கட்டில் நின்றிருந்த ஒரு நபரை, நடத்துனர் ஆவேசமாகப் பேசி, அவரை தலையில் அடித்து,  மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளினார்.

அந்த  நபரும் சாலையில் விழுந்தார், பேருந்து உடனே அங்கிருந்து கிளம்பிச் சென்றது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவின் உத்திரப்பிரதேசமாக மாறி வரும் கர்நாடகா... ஆட்சியாடா நடத்துரீங்க சங்கிகளா...! pic.twitter.com/qAm7K979rP

— Shafeeq (@shafeeqkwt) September 8, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்