பழங்கால 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி- அண்ணாமலை

புதன், 19 ஜூலை 2023 (20:56 IST)
கொள்ளையடிக்கப்பட்ட நமது பழங்கால பொக்கிஷங்களில் 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால தொல்பொருள்களில் 13 பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.

கடந்த 9 ஆண்டுகளில் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நமது பழங்கால பொக்கிஷங்களில் 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.

சமீபத்தில் மீட்கப்பட்ட தொல்பொருட்களில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் சிலை மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை ஆகியவை இருப்பதை கண்டு மனம் மகிழ்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.  

2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால தொல்பொருள்களில் 13 பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.

கடந்த 9 ஆண்டுகளில் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நமது பழங்கால பொக்கிஷங்களில் 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த மாண்புமிகு பாரத பிரதமர்… https://t.co/HdkC0xGFMj

— K.Annamalai (@annamalai_k) July 19, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்