மது ஒழிப்பை வலியுறுத்தி இன்று நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தர மறுத்ததால், அந்த அமைப்பின் மாநில இணைச்செயலாளர் பூவை கந்தன் விலகியுள்ளார்.
மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை முழு அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து அழைப்பு விடுத்தன. இதைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டவை ஆதரவு கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.