800 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தைப் பாதுகாக்க, ₹2 கோடி நிதி ஒதுக்கீடு!

செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (18:42 IST)
800 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தைப் பாதுகாக்க, ₹2 கோடி நிதி ஒதுக்கீடு!
800 ஆண்டுகள் பழமையான ராட்சச ஆலமரத்தை பாதுகாக்க தெலுங்கானா அரசாங்கம் ரூபாய் 2 கோடி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப் என்ற நகரில் 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரம் சிதிலமடைந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்து அரசு ஆய்வு செய்து தற்போது இந்த மரத்தை பாதுகாக்க ரூபாய் 2 கோடி நிதியை தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்த தகவலை டி.ஆர்.எஸ் கட்சியின் எம்பி சந்தோஷ் குமார் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த ஆல மரம் சரிந்து விழுந்த வண்ணம் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்